follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் சிக்கல்

இலங்கை – பங்களாதேஷ் போட்டியில் சிக்கல்

Published on

டில்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக நாளை (06) இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடரின் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக பங்களாதேஷ் அணியின் வீரர்கள் பலர் நேற்றைய பயிற்சியில் பங்கேற்கவில்லை.

நேற்றைய தினம் 08 பங்களாதேஷ் வீரர்கள் மாத்திரமே பயிற்சிக்காக வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க கூறுகையில், மோசமான காசு மாசுபாட்டை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் வீரர்கள் தங்கள் உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், டில்லியில் நிலவும் காற்றுச்சூழல் ஆட்டத்தை மேலும் பாதிக்கும் என சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு...