follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1ரோபோவால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

ரோபோவால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

Published on

தென் கொரியாவில் ரோபோ தாக்கியதில் அந்நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரோபோவால் தாக்கப்பட்டார்.

40 வயதான அந்த நபர் ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபரை ரோபோ பிடித்து அவரது முகம் மற்றும் மார்பை நசுக்கியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹெப் தெரிவித்துள்ளது.

காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் இறந்தார்.

ரோபோவின் பணி மிளகு பெட்டிகளை தூக்கி தட்டுகளுக்கு மாற்றுவதாகும்.

நவம்பர் 8 ஆம் திகதி, இறந்த தொழிலாளி தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள மிளகு வரிசைப்படுத்தும் ஆலையில் பயன்படுத்துவதற்காக ரோபோவை சோதித்துக்கொண்டிருந்தார்.

அதன்படி, சோதனை ஓட்டத்திற்கு முன், அந்த ஊழியர் ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை சரிபார்த்துக்கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வகையில், மார்ச் மாதம், 50 வயது தென் கொரிய நபர், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் போது, ​​ரோபோ மோதியதில், பலத்த காயமடைந்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...