follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

Published on

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (20) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கோப் குழுவை தொடர்வதா அல்லது அதனை கலைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது என மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசாரணை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையின் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...