follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1வரவு செலவுத் திட்டத்திற்கு பௌசி ஆதரவளிப்பது ஏன்?

வரவு செலவுத் திட்டத்திற்கு பௌசி ஆதரவளிப்பது ஏன்?

Published on

தனது வாழ்நாள் முழுவதும் போராடிய போதும் கொழும்பு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.

எனவே இவ்வருட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு நிரந்தர உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீண்டகாலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு அரசாங்கங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வருட வரவு செலவு திட்ட யோசனைக்கு ஆதரவை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாராகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...