follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம்

சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம்

Published on

சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும் என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கங்கள் கூறுகின்றன.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குழு உறுப்பினர் தில்கா சுராங்கனி இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியால் உருவாகியுள்ள சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழக் கூடிய ஊதியத்தை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பளம் கிடைக்கப் போராட வேண்டும் என்றும் தில்கா சுராங்கனி குறிப்பிட்டார்.

பொருட்களின் விலை உயர்வை பொருத்து விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு விலை சூத்திரம் இருந்தாலும், சம்பளத்திற்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்குரியது என வடமேற்கு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெட்சில பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த கொவிட் காலத்தில், பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியை குறைத்தன.

ஆனால், இதுவரை பல அமைப்புகள் குறைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சில தொழிற்சாலைகள் ஆர்டர்கள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்களை வீட்டிலேயே தங்க வைத்து பாதி ஊதியத்தை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களை வீட்டிலேயே தங்க வைத்து அவர்களுக்கு ஊதியம் வழங்கும் சுமார் 100 தொழிற்சாலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...