follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஒரே நிறுவனத்தின் கீழ் இயங்கவுள்ள தொலைக்காட்சியும் வானொலியும்

ஒரே நிறுவனத்தின் கீழ் இயங்கவுள்ள தொலைக்காட்சியும் வானொலியும்

Published on

தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கும் இலங்கை அரச தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை அரச வானொலி கூட்டுத்தாபனம் என்பன பொது நிறுவனமாக மாற்றப்படும் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் ஊடகத்துறை அமைச்சர் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் 277 மில்லியன் ரூபாவும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் 457 மில்லியன் ரூபாவும் நட்டத்தை சந்தித்துள்ளதாக தலைவர் காட்டியுள்ளார்.

இந்த அலைவரிசைகளுக்கு நிதி ஒதுக்குவது திறைசேரிக்கு கடினமாக இருப்பதாகவும், அதன்படி இந்த ஜோடி சேனல்களை இணைத்து பொது நிறுவனமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச ஊடகங்கள் போதிய விளம்பரங்களை வழங்குவதில்லை என குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களின் அசௌகரியங்கள், அபிவிருத்தியின் பின்னர் மக்கள் பெற்றுள்ள வசதிகள் தொடர்பில் பொது ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சமூக கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து குழுவிடம் வழங்குமாறும் தலைவர் இலங்கை பத்திரிகை சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...