follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில்"

“சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில்”

Published on

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விடைத்தாள்கள் ஒரு பேப்பர் பார்சலில் போடப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீட்டின் முடிவில் தூக்கி எறியப்பட்டு குப்பையாக வீசப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், பரீட்சை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பரீட்சை திணைக்களம் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்களை தவறு எனக் கருதி நிராகரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் தூக்கி எறியப்பட்டதே சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் தாமதத்திற்கு காரணம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் பல நெருக்கடிகள் உருவாகி உள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து இவ்விடயங்களை சுட்டிக்காட்டியும் அதிகாரிகளிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...