follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1ஒரு மாதத்திலேயே சிவப்பு கட்டணப் பட்டியல்

ஒரு மாதத்திலேயே சிவப்பு கட்டணப் பட்டியல்

Published on

மின்கட்டண அதிகரிப்பின் பின்னர் நாட்டிலுள்ள 70,000,000 மின்சார பாவனையாளர்களில் கிட்டத்தட்ட 50,000,000 பேருக்கு கட்டண பட்டியல்களை வழங்கும்போது துண்டிக்கப்படுவதாகக் கூறி சிவப்பு கட்டணப் பட்டியல்களை வழங்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது வரை இரண்டு மாதங்களாகவோ அல்லது பில்களுக்கு வரம்பு இருக்கும் வரையோ சிவப்பு பட்டியல்களை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளுக்காக பொது திறைசேரி பணத்தை மீள வழங்காத காரணத்தினால், அந்தந்த மின் வலயங்களுக்கு தமது விருப்பத்தின் பிரகாரம் வருமானத்தை பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ஒரு மாத காலத்திற்குள் கட்டணங்களை செலுத்தாதவர்கள் அதனை செலுத்த வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இதனால் இந்நாட்டில் மொத்தமுள்ள 70,000,000 மின் பாவனையாளர்களில் சுமார் 50,000,000 பேர் சிவப்பு கட்டணப் பட்டியல்களை பெறுவதாகவும், 2,000,000க்கும் அதிகமானோரின் ஒவ்வொரு கணமும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடுவதாகவும் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...