follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1காலி கோட்டையில் பற்றுச்சீட்டு அறவிடப்படாது

காலி கோட்டையில் பற்றுச்சீட்டு அறவிடப்படாது

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவினால், காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என இன்று (06) பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினரிடம் வினவப்பட்டது.

“காலி கோட்டைக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளிடம் பற்றுச்சீட்டு வசூலிக்கப்படுவதாக இப்போதெல்லாம் ஒரு சர்ச்சை உள்ளது. இன்னும் இல்லை. அதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம் என கூற விரும்புகிறேன்..”

“ஒவ்வொரு நாளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலி கோட்டைக்கு வருகை தருகின்றனர்.”

“சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பற்றுச்சீட்டு வழங்கினால், கோட்டைக்குள் சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள்.”

“காலி கோட்டை 09 ஏக்கர், 03 கி.மீ அகலம் கொண்டது. சுற்றுலாப் பயணிகள் காலி கோட்டைக்கு சுற்றிலும் உள்ள காட்சிகளைக் காண வருகிறார்கள்.”

அதற்கு பதிலளித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க;

“காலி கோட்டைக்குள் நுழையும் போது டிக்கெட் வாங்கும் எண்ணம் இல்லை. அருங்காட்சியகம் மற்றும் சிறப்பு இடங்களுக்கு மட்டுமே பணம் எடுக்கப்படுகிறது, அதை பராமரிக்க வேண்டும். ஏனெனில் கோட்டை சுவர் மண்சரிவு அபாயத்தில் உள்ளது. அவை பராமரிக்கப்பட வேண்டும்.”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...