follow the truth

follow the truth

May, 21, 2024
Homeவிளையாட்டுதலைமை பயிற்றுவிப்பாளரின்றி இலங்கை வரும் ஜிம்பாப்வே அணி

தலைமை பயிற்றுவிப்பாளரின்றி இலங்கை வரும் ஜிம்பாப்வே அணி

Published on

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் டேவிட் ஹோக்டன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டேவிட் ஹோக்டனுக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்த நிலையில் இவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜிம்பாப்வே அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. குறித்த இந்த தொடரில் தலைமை பயிற்றுவிப்பாளரின்றி ஜிம்பாப்வே அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைமை பயிற்றுவிப்பாளருக்கு பதிலாக இலங்கை தொடருக்கான தொழிநுட்பக் குழு ஒன்றை நியமிக்கவும் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.

ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த 18 மாதங்களாக டேவிட் ஹோக்டன் செயற்பட்டுவந்தார். இவரின் பதவிக்காலத்தில் சடுதியான முன்னேற்றங்களை ஜிம்பாப்வே அணி காட்டியிருந்த போதும், இறுதியாக T20 உலகக்கிண்ணத்துக்கான வாய்ப்பை இழந்திருந்தது.

இவ்வாறான நிலையில் புதிய பாதை ஒன்றில் ஜிம்பாப்வே அணி செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக தன்னுடைய பதவியிலிருந்து விலகியுள்ளதாக டேவிட் ஹக்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...