follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

ஒன்பது மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

6-9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை ஒரு டோஸ் வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதன்படி, தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் இந்த தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி திட்டம் ஜனவரி 6ம் திகதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும்.

2019 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இலங்கையை தட்டம்மை நோயை ஒழித்த நாடாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...