follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1இன்று முதல் உணவக உணவுகளின் விலை அதிகரிப்பு

இன்று முதல் உணவக உணவுகளின் விலை அதிகரிப்பு

Published on

சோறு, கொத்து, தேநீர், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் சிற்றுண்டிகள் (சோர்ட் ஈட்ஸ்) 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்திருந்தார்.

மேலும், சோறு, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் என்பன 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், கோட் சூட் அணிந்த கொத்து பாஸ் ஒருவர் ஊடகங்கள் முன்னிலையில், உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதாகவும், ஒரு ரூபாய் ஏனும் உணவு விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும், அத்தகைய உணவகங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுமாறும் நுகர்வோரிடம் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...