follow the truth

follow the truth

May, 4, 2025
Homeவிளையாட்டுLPL போட்டியில் மெத்யூஸ், குசல் உட்பட 10 வீரர்களை இணைக்க பரிந்துரை

LPL போட்டியில் மெத்யூஸ், குசல் உட்பட 10 வீரர்களை இணைக்க பரிந்துரை

Published on

லங்கா பிரிமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் உரிமைத்துவ அணிகளினால் தெரிவு செய்யப்படாமல் இருந்த சில தேசிய வீரர்கள் உட்பட 10 வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அக்கில தனஞ்சய, ப்ரவீன் ஜயவிக்ரம, மினோத் பானுக்க, சதீர சமரவிக்ரம, அஷான் ப்ரியஞ்சன், ஷிரான் பெர்னாண்டோ ஆகிய வீரர்களையே கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

குறித்த 10 வீரர்களில் தலா இருவரை உரிமைத்துவ அணிகள் தெரிவு செய்துகொள்ளலாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உரிமைத்து அணிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...