follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் - ஜனாதிபதி

இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் – ஜனாதிபதி

Published on

வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 02 மாதங்களில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயற்படும் நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் கைத்தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாய சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ்.பல்கலைக்கழக கல்வி ஊழியர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீ.சத்குணராஜா தலைமையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...