follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP1கியூபாவில் எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு

கியூபாவில் எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு

Published on

எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலையுடன் கூடுதலாக மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என கியூபா அரசு அறிவித்துள்ளது.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் கியூபா, 1990க்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது.

நாட்டில் பணவீக்கமும் வேகமாக அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விலையை 500 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் நிலைமை மேலும் மோசமாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...

மின்கட்டண திருத்த யோசனை தொடர்பான மக்கள் கருத்து கோரல்

மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண்...