follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் - பொதுத் தேர்தல் ஜனவரி 2025

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் – பொதுத் தேர்தல் ஜனவரி 2025

Published on

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பரில் மற்றும் பொதுத் தேர்தல் 2025 ஜனவரியிலும் நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(09) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில்..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் சில மாதங்கள் முழுநேரம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தேசியத் தேர்தலில் வெற்றிபெற கட்சியின் அமைப்பை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் தான் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் ஜனாதிபதி அறிவித்ததாக, அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டத்தை காலி நகரில் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...