follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1புதிய சூதாட்ட விடுதிகள் 10 - 'அதிகபட்ச வரியை அறவிடுவோம்'

புதிய சூதாட்ட விடுதிகள் 10 – ‘அதிகபட்ச வரியை அறவிடுவோம்’

Published on

புதிய சூதாட்ட விடுதிகளுக்கான பத்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (10) தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், முதல் நான்கு அனுமதிப்பத்திரங்களைத் தவிர, கசினோக்களை திறப்பதற்கு புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவிக்கையில்;

“.. ஐந்து ஆண்டுகளுக்கு கசினோக்கள் பதிவுக் கட்டணத்திற்காக 50 கோடிகளை எடுக்கவுள்ளோம். இதன் பிறகு புதிதாக திறக்கப்பட்டால் ஐம்பது கோடிக்கு மேல் வசூலிக்க எதிர்பார்த்துள்ளோம்.. ஆண்டுதோறும் 20 கோடியை 50 கோடியாக மாற்றினோம்.

இலங்கை பிரஜை ஒருவர் சூதாட்ட விடுதிக்குள் நுழைந்தால் பதினாறாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இலங்கையர்கள் இங்கு செல்வதை ஊக்கப்படுத்தவே இது செய்யப்படுகிறது. கசினோ கேமிங்கை முடிந்தவரை வெளிநாட்டவர்களுக்கு மட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். கசினோ லாபத்தில் நாற்பது சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மாநில வருவாய்க்காக அதிகபட்ச வரிகள் எடுக்கப்படுகின்றன.. ’’

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...