follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP1டெலிகாம் இனை வாங்க அம்பானி, அல்லிராஜா களத்தில்

டெலிகாம் இனை வாங்க அம்பானி, அல்லிராஜா களத்தில்

Published on

தனியார்மயமாக்கலின் கீழ் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்கு முதலீட்டுக்கான தகுதியை அறிவித்துள்ள மூன்று நிறுவனங்கள் தொடர்பான மதிப்பீடுகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.

அரச நிறுவன மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின் அரசுக்குச் சொந்தமான பங்குகளில் முதலீடு செய்வதற்கான தகுதியை அறிவிக்க கடந்த வெள்ளிக்கிழமை (12) கடைசி நாளாகும், அதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், போfர்ச்சூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மற்றும் பெட்டிகோ கொமசியோ இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் தகுதி அறிவிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில், இந்தியன் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இந்தியாவின் வலிமையான வணிகக் குடும்பங்களில் ஒன்றான முகேஷ் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையின் கீழ் உள்ள நிறுவனமாகும், அதே சமயம் பெட்டிகோ கொமசியோ நிறுவனம் அல்லிராஜா சுபாஷ்கரனுக்குச் சொந்தமான லைக்கா மொபைல் வணிகத்திற்குச் சொந்தமானது. , தற்போது ஸ்வர்ணவாஹினி உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடக வலையமைப்பைக் கொண்டவர். இந்நிறுவனங்களைத் தவிர, பார்ச்சூன் குளோபல் என்ற நிறுவனமும் தகுதிகளை சமர்ப்பித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...