follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1மஹிந்த கொடித்துவக்கு விளக்கமறியலில்

மஹிந்த கொடித்துவக்கு விளக்கமறியலில்

Published on

அவலோகிதேஸ்வரா என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசங்கம் செய்த வேளையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடித்துவக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிப்பிட்டியவில் வைத்து சந்தேகநபர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த கொடித்துவக்கு என்ற போதகர், கடந்த 1ஆம் திகதி எகிப்தில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அவர் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதும், அவரைப் பின்பற்றுபவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவதும் போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதன்படி, குறித்த நபரின் விரிவுரைகள் மூலம் புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் அவமதிக்கப்படுவதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் பெற்றுக்கொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...