follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1பெலியத்த கொலை தொடர்பில் ரதன தேரர் மௌனம்

பெலியத்த கொலை தொடர்பில் ரதன தேரர் மௌனம் [VIDEO]

Published on

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதாக அக்கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துரலியே ரதன தேரருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவுக்கு நீதவான் எதிர்வரும் ஜூன் 4 ம் திகதியன்று அழைப்பாணை விடுத்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் சமன் பெரேரா இறந்தார் என்ற உண்மை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. இதன்படி சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்ப நீதவான் தீர்மானித்தார்.

சந்தேகநபரான சமன் பெரேராவுக்கு எதிரான இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறிவின் மையமாக மாறும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்ஃபி (Dr.Jonathan Murph) மற்றும்...

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய...

மஹியங்கனை -15 வயது மாணவனுக்கு எய்ட்ஸ் உறுதி

மஹியங்கனை பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு எய்ட்ஸ் நோய் (HIV) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை...