follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்றத்தின் மின்கட்டணங்கள் நிலுவையின்றி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன

நாடாளுமன்றத்தின் மின்கட்டணங்கள் நிலுவையின்றி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன

Published on

பாராளுமன்றில் மின்சாரக் கட்டணம் பற்றாக்குறையில்லாமல் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினாலோ அல்லது ஜனாதிபதி செயலகத்தினாலோ மின்சார கட்டணம் செலுத்துவதில் தற்போது நிலுவை இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் மின்கட்டணத்தை செலுத்தவில்லை என அறிவித்து பாராளுமன்றத்தை அவமதித்த ரஞ்சன் ஜெயலாலை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

7 கோடி ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாமல் பாராளுமன்றம் செயலிழந்துள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அதில் உண்மையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...