follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படும்

பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படும்

Published on

தொடர் டீசல் விலை உயர்வால் பேரூந்து கட்டணத்தை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேரூந்து சங்கங்கள் கூறுகின்றன.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்,

“முன்னதாக, ஒரு லீட்டர் டீசல் விலை, 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. அத்துடன் நிற்காமல், நேற்று, டீசல் விலை, மீண்டும், 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, பேரூந்து கட்டணம் அதிகரிக்க வேண்டும்.”

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,

“இரண்டு வாரங்களுக்குள் கண்டிப்பாக பேரூந்து கட்டணத்தை உயர்த்துவோம். இந்த நேரத்தில் குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் 35 ரூபாயாக இருக்கும்..”

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...