follow the truth

follow the truth

May, 25, 2025
HomeTOP1சிறைக்கு சென்ற கெஹெலிய சிறைக்கைதிகளின் பெயர் பட்டியலை கோரியுள்ளாராம்..

சிறைக்கு சென்ற கெஹெலிய சிறைக்கைதிகளின் பெயர் பட்டியலை கோரியுள்ளாராம்..

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறு குற்றங்களுக்காக 5,000 ரூபா மற்றும் அதற்கு குறைந்தளவிலான பணத்தினை செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை கோரியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெயர் பட்டியலில் 20 பேரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலினை எடுக்க பிரதான கராணம் இவர்களது தண்டப்பணத்தினை செலுத்தி அவர்களை விடுவிக்க எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அறிந்த பெண் சிறைக்கைதி ஒருவர், கெஹெலிய ரம்புக்வெல்லவை சந்திக்க செல்கிறார். “அமைச்சரே, எனது தண்டப்பணத்தினை நீங்கள் செலுத்த வேண்டாம். எனது தண்டனைக்காலம் சில நாட்களில் முடிவடையும். பின்னர் நான் சிறைச்சாலயில் இருந்து வெளியேறுவேன். நீங்கள் தண்டப்பணத்தினை செலுத்த வேண்டாம். அந்த 5,000 ரூபாவை எனது கைகளில் தாருங்கள்..” என அந்தக் கைதி கேட்டிருக்கிறாராம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம்...