ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு திட்டங்கள் குறித்து ஜனாதிபதியும் இந்திய வெளியுறவு அமைச்சரும் கலந்துரையாடினர்.