follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அவசர பொதுத் தேர்தல்! ஏப்ரலில் தீர்மானம்

அவசர பொதுத் தேர்தல்! ஏப்ரலில் தீர்மானம்

Published on

இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது ஏப்ரல் மாதம் தீர்மானிக்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நடத்தப்பட வேண்டும் எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்புகளின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு அரசாங்கத்தின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஜனாதிபதி தரப்பில் இருந்து ஏப்ரல் மாதம் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஏப்ரல் மாத இறுதியில் பொஹட்டுவ தனது ஆதரவு நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது. எனவே, பொஹட்டுவ ஜனாதிபதிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால், ஜனாதிபதிக்கு ஆதரவான பொஹட்டுவ மக்களை ஒன்று திரட்டி உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்வோம் என அரசாங்க சிரேஷ்டர்கள் குழுவொன்று ஆலோசனை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவும் குழு முன்மொழியும் என அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வது அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியின் நிலைப்பாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...