follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1"சனத் நிஷாந்தவின் மரணத்தின் உண்மையை விரைவில் கண்டறியவும்"

“சனத் நிஷாந்தவின் மரணத்தின் உண்மையை விரைவில் கண்டறியவும்”

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா? சாதாரண விபத்தினால் இந்த மரணம் இடம்பெற்றதா என்பதை விரைவாக ஆராய்ந்து குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டுமென குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அந்த சந்தேகத்தின் காரணமாகவே அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதாகத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களிலும் இது தொடர்பில் விவாதம் இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு விரைவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...