follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு

Published on

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக மத்திய வங்கி அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அதிகாரிகள் காலை 10.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதொடும் அன்றைய தினம் காலை 10.30க்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டதாக இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய துறைகளில் சம்பளம் திருத்தப்பட வேண்டும் என மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் சங்கம், உரிய சம்பள திருத்தம் நடைபெறவில்லையென்றால், மத்திய வங்கியின் எஞ்சியிருந்த கணிசமான அதிகாரிகள் மத்திய வங்கியை விட்டு வெளியேறியிருக்கக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடத்தில் மத்திய வங்கி அங்கு பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சுமார் நூறு அதிகாரிகளை இழந்துள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...