follow the truth

follow the truth

June, 3, 2025
HomeTOP1பொன்சேகாவின் இடைக்கால தடைக்கு ஐ.ம.சக்தி எதிர்ப்பு

பொன்சேகாவின் இடைக்கால தடைக்கு ஐ.ம.சக்தி எதிர்ப்பு

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை இடைநிறுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாக இன்று (04) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

அதன்படி, இந்த ஆட்சேபனைகள் மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரத் ​​பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பியசேன கமகேவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  சுமார் 3 மணி...

கெஹெலிய மற்றும் அவரது மகனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க...

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு

யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை...