follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுகால்நடைகளுக்குள் பரவி வரும் கொடிய தொற்றுநோய்

கால்நடைகளுக்குள் பரவி வரும் கொடிய தொற்றுநோய்

Published on

கிளிநொச்சி, தர்மபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கால்நடைகளுக்கு பரவி வரும் பசு வைரஸ் நோய் காரணமாக நேற்று (03) வரை பல மாடுகள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி எஸ். நிரஞ்சன் கூறுகையில், நோய் அறிகுறி குறைந்துள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறதாகவும், குறித்த தொற்றுநோய் ஆரம்பத்தில் இருக்கும் போது பசுக்கள் உணவு உண்பதை நிறுத்துவதாகவும், இருந்த இடத்தை விட்டும் வெளியேறத் தயங்குவதாகவும் அப்படியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாடுகளின் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் ஏற்படும் என்றும் வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நோய் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தென்படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு நோயை குணப்படுத்த முடியாது என தர்மபுரத்தில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த வருடம் இப்பிரதேசங்களில் கால்நடைகளை தாக்கிய இந்த தொற்று நோய் காரணமாக 400க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பியசேன கமகேவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  சுமார் 3 மணி...

கெஹெலிய மற்றும் அவரது மகனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க...

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு

யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை...