follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்

Published on

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே ரயிலில் பயணித்த இரு சுற்றுலா பயணிகளை நாவலப்பிட்டியில் ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளுடன் முதல் வகுப்பில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகள் இருவரையும் நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் தாக்கி, ரயிலில் இருந்து வெளியே இழுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு வெளிநாட்டவர்களையும் ரயிலில் இருந்து இறங்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டாளரால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இறங்க மறுத்ததால், ரயிலில் இருந்து அவர்களை வௌியேற்றியதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரயில்வே பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.பண்டார தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின்...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...