follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP1பாடசாலைகளில் அரசியல் செயற்பாடுகளுக்கு தடை

பாடசாலைகளில் அரசியல் செயற்பாடுகளுக்கு தடை

Published on

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றினை கருத்திற்கொண்டு, அந்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தடை செய்வதற்கு மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27)...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...