follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுகரையோர ரயில் சேவையில் பாதிப்பு

கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

Published on

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 என்ற புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

இரண்டு புகையிரத பாதைகள் சந்திக்கும் இடத்தில் புகையிரதம் தடம் புரண்டதுடன், இதன் காரணமாக பெலியஅத்தவிலிருந்து மருதானை மற்றும் பெலியஅத்த – மருதானை வரை செல்லும் இரண்டு புகையிரதப் பாதைகளும் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இந்த ரயில் தெற்கு களுத்துறைக்கு பயணித்து மீண்டும் காலை 7.20 மணிக்கு தெற்கு களுத்துறையில் இருந்து மருதானைக்கு திரும்பும் என ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்வதாக ரயில்வே தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய சேர்ப்பினை மேற்கொள்ளும் தொழில்நுட்ப பணியாளர்கள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...