follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1கொத்து முதலாளிக்கு பிணை

கொத்து முதலாளிக்கு பிணை

Published on

கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கெசல்வத்தை பொலிஸார் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அளுத்கடை பகுதியில் உள்ள வீதி உணவகம் ஒன்றில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை கெசல்வத்தை பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டவர் ஒரு கொத்து பார்சலின் விலையை கேட்டபோது, ​​1,900 ரூபா என்று கூறியபோது வெளிநாட்டவர் அதனை வாங்க மறுத்ததாகவும், பின்னர் கடை உரிமையாளர் அவரை அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் இந்த நாட்களில் பரவிவருவதுடன், அந்த காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...