follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஇந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம்

இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம்

Published on

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 100,000 க்கும் அதிகமானவர்கள் யால தேசிய பூங்கவைப் பார்வையிட வந்துள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, உடவலவ, மின்னேரிய, கவுடுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக் கூடிய வருமானம் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...