follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுதக்காளி விலை படுத்தது

தக்காளி விலை படுத்தது

Published on

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை நேற்று(17) 15 ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும், ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விலை 40 ரூபாய் வரையும், முள்ளங்கி ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 35 ரூபாய் வரையும், ஒரு கிலோ கெக்கிரி மற்றும் வெள்ளரி மொத்த விற்பனை விலை 20 ரூபாய் வரையும், மொத்த விலை ஒரு கிலோ வெண்டைக்காய் 40 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் மரக்கறிகளை கொண்டு வந்த போதிலும், வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வராததால் விலை பெருமளவு குறைந்துள்ளது.

தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாக குறைந்திருந்த போதிலும், நேற்று (17ம் திகதி) புறக்கோட்டை மரக்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புறக்கோட்டை காய்கறி சந்தையில் பீன்ஸ் கிலோ 120 ரூபாய்க்கும், கரட் கிலோ 300 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரி கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...