follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுதமிதா - கணவருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு

தமிதா – கணவருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு

Published on

கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரிடம் 34 இலட்சம் ரூபா மோசடி செய்து சிறையில் உள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னிடம் இருந்து பெறப்பட்ட 34 இலட்சம் பணத்தில் 04 இலட்சம் பின்னர் அந்த நபருக்கு வழங்கப்பட்டதாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த மோசடியின் உண்மையான தொகை 30 இலட்சம் ரூபா என இன்றைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இது குறித்து நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து தமிதா மற்றும் அவரது கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...