follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுசில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளால், அரசுக்கும், மக்களுக்கும் பெரும் நஷ்டம்

சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளால், அரசுக்கும், மக்களுக்கும் பெரும் நஷ்டம்

Published on

சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தவறுகளினால் இறுதியில் மக்களால் குற்றம் சுமத்தப்படுவது அரசியல்வாதிகள் தான் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் அதிகாரத்துவம் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கம்பஹா மாநகரசபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று (24) கம்பஹா மாநகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கம்பஹா மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பராமரிப்புத் திட்டங்களின் நிலை குறித்து கம்பஹா மாநகர ஆணையாளரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 33 பராமரிப்புத் திட்டங்களில் தற்போது 15 பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பராமரிப்பு வேலைத்திட்டங்கள் இவ்வருடம் நான்கு மாதங்களாகியும் நிறைவு செய்யப்படவில்லை என அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.

எஞ்சிய பராமரிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி மற்றும் நிறைவு செய்யும் திகதி எப்போது என்பதற்கான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்குமாறும், அந்த பராமரிப்புத் திட்டத்தை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்குமாறும் கம்பஹா மாநகர ஆணையாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதிகாரிகளின் பலவீனமே இத்திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம் என்று கூறிய அமைச்சர், இதுபோன்ற அதிகாரிகளை நீக்கிவிட்டு, பணியாற்றக்கூடிய அதிகாரிகளை கொண்டு பணிகளை தொடர தயார் என்று கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:

கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பராமரிப்பு பணிகள் இன்று வரை முடிக்கப்படவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நகரசபையில் ஐந்து டிராக்டர்கள் உள்ளன. இன்று ஒரு டிராக்டர் மட்டுமே இயங்குவதாக கூறப்படுகிறது. மீதமுள்ள நான்கு டிராக்டர்களை ஏன் இது வரை பெற முடியவில்லை?

கம்பஹாவில் உள்ள ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களில் இவ்வாறான பிரச்சினைகள் வருவதில்லை. கம்பஹா பிரதேச சபை, மினுவாங்கொடை நகர சபை, உள்ளுராட்சி சபையின் பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றன. அபிவிருத்தித் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கம்பஹா நகர சபையின் பணிகள் எப்போதுமே தாமதமாகவே நடைபெறுகின்றன. அதிகாரிகளின் பலவீனமே இதற்கு காரணம். இதில் அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர்.

நகரசபை எடுக்கும் முடிவுகளை முறையாக செயற்படுத்த வேண்டும். அதிகாரிகள் வேலை செய்யாததால், மக்கள் எங்களுக்கு ஏசுகின்றனர்.

அதிகாரிகளின் தாமதத்தால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுகளுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை. எடுக்கும் முடிவுகள் வெறும் பேச்சில் எடுக்கப்பட்ட முடிவல்ல. முடிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளன. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒப்புதல் அளித்தவுடன், செயல்படுத்த வேண்டிய திட்டங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அனுப்புகிறோம். மதிப்பீடு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு தான். அனுமதி கிடைத்தவுடன் வேலைகளை ஆரம்பிக்க முடியும். இங்குள்ள மிகப்பெரிய தவறு வேலை செய்யும் போது ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல். அவை சரி செய்யப்பட வேண்டும்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...