follow the truth

follow the truth

August, 26, 2025
Homeஉலகம்பார்படாஸ் தன் புதிய குடியரசை உருவாக்கியது.

பார்படாஸ் தன் புதிய குடியரசை உருவாக்கியது.

Published on

கரிபியன் தீவான பார்படாஸ் 396 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் ஜனாதிபதியுடன் இன்று ஒரு புதிய குடியரசை உருவாக்கியுள்ளது.

இதுவரை பிரித்தானியாவின் இராஜ்ஜியத்தின் கீழ் இருந்து வந்த பார்படாஸ் அரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை நீக்கியுள்ளது.

கரீபியன் தீவுக்கு முதல் ஆங்கிலக் கப்பல்கள் வந்து ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் கடைசி எஞ்சிய காலனித்துவ பிணைப்புகளை பார்படாஸ் துண்டித்துள்ளது.

தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள சேம்பர்லைன் பாலத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் நள்ளிரவு புதிய குடியரசு பிறந்தது. கூட்ட நெரிசலான ஹீரோஸ் சதுக்கத்தில் பார்படாஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது 21 துப்பாக்கி தோட்டாக்கள் சுடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜமைக்கா உள்ளிட்ட 15 பிற நாடுகளுக்கும் இன்னும் ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத் இன் காலனித்துவ வரலாற்றினை முறித்துக் கொண்ட இறுதி நாடாக பார்படாஸ் மாறியது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...