follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

Published on

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த ஜனாதிபதி மற்றும் அவருடன் பயணித்த ஏனையவர்களுக்காக 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் திடீர் மரணத்திற்கு ஹமாஸ் அமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பாக ஈரான் மக்களுடன் வருத்தம் மற்றும் வேதனையை பகிர்ந்து கொள்வதாக அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் முழு ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் தேசிய துக்கத்தை அறிவித்த பிறகு, சிரிய அரசாங்கமும் தேசம் மற்றும் ஈரான் அரசாங்கத்துடனான ஒற்றுமை, தோழமை மற்றும் பச்சாதாபத்திற்கு ஏற்ப மூன்று நாட்களுக்கு தேசிய துக்கத்தை அறிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...