follow the truth

follow the truth

August, 26, 2025
Homeஉலகம்ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

Published on

புதிய கொவிட் திரிபு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாட்டவர்களுக்கு தமது எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவுஸ்திரேலிய வீசாவுடன் வெளிநாடுகளில் தங்கியிருப்போருக்கு இன்று முதல் (டிசம்பர் 1) எல்லைகளைத் திறப்பதாக அவுஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுள்ள ஐந்து பேர் அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலிய தீர்மானித்துள்ளது.
புதிய திரிபு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளை மீளத் திறக்கும் தீர்மானத்தை, குறைந்தது 15 நாட்களுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்ற உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டவர் உள்நுழைய தடை விதிப்பதாக ஜப்பான் நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...