follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இஸ்ரேலியர்களை அழைக்கும் இந்தியா

இஸ்ரேலியர்களை அழைக்கும் இந்தியா

Published on

இஸ்ரேல் நாட்டவர்களை மாலைத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையே மாலைத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் குடிமக்கள் வேறு ஒரு நாட்டில் இரண்டாவது கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் கூட மாலைத்தீவுக்கு வருவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர மாலைதீவு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுற்றுலாத் துறையை முழுமையாக நம்பியிருக்கும் மாலைத்தீவு நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலில் இருந்து சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அவர்கள் வருகையைத் தடை விதிக்கும் வகையிலான முடிவை மாலைத்தீவு எடுத்துள்ளது.

எவ்வாராயினும் மாலைதீவு தடைவிதித்தால் என்ன இந்தியாவில் இஸ்ரேலியர்களுக்கு சுற்றுலா செல்ல எவ்வளவோ இடம் இருக்கிறது என இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளது.

அதில் கேரளா, லக்ஷ்வ தீப், கோவா, நிகோபார் தீவுகளின் புகைப்படங்களை உள்ளடக்கி அந்த பதிவை இட்டுள்ளது. இங்கே உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இங்கே சிறந்த வசதிகள் உண்டு என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான...