follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP1சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தயாரித்தது பழச்சாறு இயந்திரத்தில்?

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தயாரித்தது பழச்சாறு இயந்திரத்தில்?

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறார் புற்றுநோய் மற்றும் இம்யூனோகுளோபுலின் மருந்துகள் பழச்சாறு பொருட்கள் மற்றும் பால் பாக்கெட் உற்பத்தி இயந்திரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

குறித்த மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனம் இலங்கைக்கு மருந்து உற்பத்தி தொடர்பான இயந்திரங்களை ஒருபோதும் இறக்குமதி செய்யவில்லை எனவும் 2017-2021 காலப்பகுதியில் குறித்த நிறுவனம் பழச்சாறு உற்பத்தி இயந்திரத்தை மாத்திரமே இறக்குமதி செய்துள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பால் சேமிப்பு சாதனம், சுங்கம் மூலம் உயிர் ஆதரவு உபகரணங்கள் போன்றவற்றையே இறக்குமதி செய்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..

2023 ஏப்ரலில் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஆய்வு செய்ததாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மருந்து உற்பத்திக்கு ஏற்ற வசதிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...