follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்

கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்

Published on

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளையும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இன்று இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொசன் விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் அரசாங்க பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு நேற்று விசேட அறிவிப்பை வௌியிட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...