follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுயூடியூபரான இலங்கைப் பெண் பின்லாந்தில் கொலை

யூடியூபரான இலங்கைப் பெண் பின்லாந்தில் கொலை

Published on

பின்லாந்தில் வசித்து வந்த Hiruni’s Northern Life என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிருணி தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டில் வாழ்ந்து வரும் அவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விபரங்களை பின்லாந்து ஊடகங்கள் வெளியிடாததுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து ஊடகங்கள் ஹிருணியின் குடும்பத்தை தெற்காசிய குடும்பமாக அறிமுகப்படுத்தியுள்ளன.

அவர்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் சமூக ஊடகங்களில் செயலில் உள்ளதாகவும், குடும்ப வீடியோக்களை ஊடகங்களுக்கு தொடர்ந்து அனுப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மரணம் கடந்த வாரம் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

அன்றைய தினம் இச்சம்பவத்தையடுத்து இந்த வீட்டுக்குச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதைக் கண்டுள்ளார். ஹிருணியின் வீடு ஹெல்சின்கியில் அமைந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...