follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1வருத்தமாக இருக்கிறது, வலிக்கிறது.. - தென் ஆப்பிரிக்கா அணித் தலைவர்

வருத்தமாக இருக்கிறது, வலிக்கிறது.. – தென் ஆப்பிரிக்கா அணித் தலைவர்

Published on

2024 டி20 உலகக் கிண்ணம் தொடரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டி கடைசி ஓவரின், கடைசி பந்துவரை திரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.

ஐ.சி.சி. நடத்திய உலகக் கிண்ண தொடர்களில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா அணி அசத்தியது. இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி வாய்ப்பை இந்தியாவிடம் பறிக் கொடுத்தது.

உலகக் கிண்ணம் தோல்வியை தொடர்ந்து போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் ஏய்டன் மார்க்ரம் கூறும் போது, “மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும். வலிக்கிறது. ஆனால் பந்துவீச்சாளர்கள் மற்றும் மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்.”

“நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். அவர்களை எங்களால் அடிக்க முடிந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். எனினும், கிரிக்கெட் எனும் தலைசிறந்த போட்டியின் சூழல் இன்று எங்களுக்கானதாக அமையவில்லை.”

“நாங்கள் ஏராளமான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை அது முடியாமல் தான் இருந்தது. போட்டியின் போது நாங்கள் சவுகரியமான நிலைக்கு வரவேயில்லை. எங்கள் மீது ஸ்கோர் போர்டு அழுத்தம் இருந்தது. அந்த வகையில், இந்த இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நாங்கள் என்பதை உணர முடியும்.”

“இந்த முடிவு நல்ல முறையில் அமையும் என்று நம்புகிறேன். கடுமையான போட்டி அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம், எங்களது திறமையை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவோம் என்று நம்புகிறேன்..” என்று தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...