follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் வைத்திசாலை அழிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் வைத்திசாலை அழிப்பு

Published on

உக்ரைன் தலைநகர் கீவில் (Kyiv) பல இடங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஒரு தாக்குதலில் குழந்தைகள் வைத்தியசாலை ஒன்றும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்ட ஓக்மடிட் குழந்தைகள் வைத்தியசாலை விடுதியில் சுமார் 20 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் உக்ரைனிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கீவில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியர் லெசியா லிசிட்சியா, ஏவுகணை தாக்கிய தருணத்தைப் பற்றி தெரிவிக்கையில்,

இது “ஒரு படத்தில் இருப்பது போல்” “பெரிய ஒளி, பின்னர் ஒரு பயங்கரமான ஒலி” என்று விவரித்தார். “வைத்தியசாலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது, மற்றொன்றில் தீ ஏற்பட்டது. அது உண்மையில் மிகவும் சேதமடைந்துள்ளது – ஒருவேளை வைத்தியசாலையின் 60-70%,” பகுதி அழிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு பெரிய வைத்தியசாலை ஓக்மடிட் என்று லிசிட்சியா தெரிவித்தார்.

மற்ற இடங்களில், மத்திய உக்ரைனிய நகரமான Kryvyi Rih இல் நடந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள இராணுவ நிர்வாகத்தின் தலைவரின் கருத்துப்படி, கிழக்கு நகரமான Pokrovsk இல் மேலும் மூன்று பேர் மற்றும் Dnipro இல் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...