follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்காஸா போர் நிறுத்தம் : மீண்டும் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை

காஸா போர் நிறுத்தம் : மீண்டும் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை

Published on

எகிப்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களின் பங்கேற்புடன் காஸா போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தோஹாவில் தொடங்கும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.

உளவுத்துறைத் தலைவர் அப்பாஸ் கமெல் தலைமையிலான எகிப்திய பாதுகாப்புக் குழு, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து, முன்கூட்டியே போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான பணியில் ஈடுபடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

போர் நிறுத்தத்துக்கான பல விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் கெய்ரோ வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் டேவிட் பார்னியா மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள், ஆனால் இதுகுறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...