follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தெஹி பாலியல் வன்கொடுமை செய்து நாட்டை விட்டு வெளியேறினாரா?

ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தெஹி பாலியல் வன்கொடுமை செய்து நாட்டை விட்டு வெளியேறினாரா?

Published on

வணிக ஆய்வாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கோடீஸ்வர வர்த்தகரான இலங்கையின் முன்னணி நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தெஹிகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான் கோசல சேனாதீர தடை விதித்துள்ளார்.

குறித்த கோடீஸ்வர வர்த்தகர், கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த வணிக ஆய்வாளரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளம் வணிக ஆய்வாளர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை தெரிவித்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள், சுமார் ஒரு மாத காலமாக வெளிநாட்டில் இருந்த சேனா யத்தெஹிகே இலங்கை வந்தபோது, தான் இல்லாத காலகட்டத்தில் ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் வர்த்தக விவகாரங்களை ஆய்வு செய்ய எனக் கூறி கொள்ளுபிட்டியவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு முறைப்பாட்டாளரை அழைத்து இவ்வாறு முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த அழைப்பாணையின் பிரகாரம், அவர் கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றதாகவும், வியாபார விவகாரங்களை ஆராயத் தயாரான போது சந்தேகநபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காரணமாக சந்தேகநபர் வெளிநாடு செல்வதை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் கோரிய போது, ​​முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு சந்தேக நபருக்கு பயணத்தடை விதித்து, சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேற வந்தால் கைது செய்ய வேண்டும் எனவும் நீதவான் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், அவர் தீர்மானித்த அன்றே வெளிநாடு சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...