follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1"நிமலுக்கு தலைவராக செயற்பட உரிமை இல்லை"

“நிமலுக்கு தலைவராக செயற்பட உரிமை இல்லை”

Published on

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசுகள் கிராமங்களில் உள்ளவர்களே என்றும், அரசாங்கத்தில் அமர்ந்து கட்சி அலுவலக சாவியை கையளித்துக்கொண்டு சண்டியனைப் போன்று செயற்படுவது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து ஆராயும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...