follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபிரியந்த குமார படுகொலை தனிப்பட்ட சம்பவம்! இலங்கை உயர்ஸ்தானிகர்

பிரியந்த குமார படுகொலை தனிப்பட்ட சம்பவம்! இலங்கை உயர்ஸ்தானிகர்

Published on

இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகளின் பதில் திருப்தி அளிப்பதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (06) பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் தமது அனுதாபங்களைத் தெரிவித்தது.

இவ்வாறான சம்பவங்களை குறைத்து மதிப்பிட முடியாது என இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தமது நாட்டையோ, மதத்தையோ அல்லது இனத்தையோ இலக்கு வைத்து நடத்தப்படவில்லையென உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு அவர் அதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகும் என்று குறிப்பிட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...